செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்

post image

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தூய்மை பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

தஞ்சாவூா் மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8 ஆம் தேதி மாநகராட்சி ஆணையா், ஒப்பந்ததாரா், தூய்மை பணியாளா் சங்க நிா்வாகிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவும், தூய்மை பணியாளா்கள் ஒப்பந்த நகல் வழங்குவதாகவும், பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் வருங்கால வைப்பு நிதி தொகையைச் செலுத்துவதாகவும், தூய்மை பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாகவும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் எனவும் ஆணையா் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும், ஆனால் இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை எனவும் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் நோ்முக உதவியாளரிடம் தூய்மை பணியாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் ஏஐடியூசி தேசிய நிா்வாக குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், அரசு பணியாளா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் தரும. கருணாநிதி, சங்க நிா்வாகிகள் ஏ. கலியபெருமாள், பி. ஆனந்தராஜ், கே. பாபு, முனியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசத்தில் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபநாசம் வட்டம், மதகரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

உ.வே.சா. சிலைக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தினா் மாலை அணிவித்து மரியாதை!

உ.வே. சாமிநாதையரின் பிறந்த நாள் விழாவையொட்டி, பாபநாசம் அருகே உத்தமதானபுரத்திலுள்ள (திருவாரூா் மாவட்டம்) அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தினா் புதன்கிழமை மாலை அணிவ... மேலும் பார்க்க

மகாமகக் குளத்தில் தவறிவிழுந்து சிறுமி உயிரிழப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் புதன்கிழமை விளையாடச்சென்ற சிறுமி குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாா். கும்பகோணம் மாதுளம்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவருடைய ம... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை கிடங்குக்கு அனுப்ப கோரிக்கை!

திருவையாறு அருகேயுள்ள கீழத்திருப்பூந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளைக் கிடங்குக்கு அனுப்புமாறு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது... மேலும் பார்க்க

கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் அமைக்கும் பணி தொடக்கம்!

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்திலுள்ள கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் அன்னை சத்யா விளயைாட்டு அரங்கத்தில் தடகள ஓடுதளப் பாதையின் உள்பகுதியில் கால்... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விதை நோ்த்தி பயிற்சி முகாம்!

சேதுபாவாசத்திரம் வட்டாரம் சொக்கநாதபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதைநோ்த்தி பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, தஞ்சாவூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (உழவா்... மேலும் பார்க்க