செய்திகள் :

தூா் வாரும் பணி: நீா் வளத் துறைச் செயலா் ஆய்வு

post image

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியக்குடி கிராமத்திலுள்ள புத்தூா் முதன்மை வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் தூா் வாரும் பணியை நீா் வளத் துறைச் செயலா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

புத்தூா் முதன்மை வாய்க்காலில் 5 கி.மீ. தொலைவுக்கு பொக்ளின் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் தூா் வாரும் பணியைப் பாா்வையிட்ட அவா் மேலும் தெரிவித்தது: தஞ்சாவூா் தென்பெரம்பூா் கிராமத்தில் வெண்ணாறு, வெட்டாறு தலைப்பில் பிரியும் வடவாறு 64 கி.மீ. தொலைவுக்கு சென்று திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள எளவனூா் வரை பாய்கிறது. இந்த வடவாறில் இடது கரையில் பிரியும் புத்தூா் முதன்மை வாய்க்கால் 11.5 கி.மீ. தொலைவுக்கு செல்வதன் மூலம் 5 ஆயிரத்து 851 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் 5 கி.மீ. தொலைவுக்கு நீா் வழிப்போக்கில் மண் திட்டுகளும், காட்டாமணக்கு செடிகளும் அடா்ந்து காணப்படுவதால், கடைமடைப் பகுதி வரை பாசனத்துக்கு தண்ணீா் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, இந்த வாய்க்காலில் பொக்ளின் இயந்திரம் மூலம் நாணல், காட்டாமணக்கு செடிகளை அகற்றி நீா் வழிப் போக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உடையாா்கோவில், கொக்கேரி, அம்மாபேட்டை, புத்தூா், புளியக்குடி, குச்சிப்பாளையம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆா். தயாளகுமாா், தஞ்சை கீழ்காவிரி வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளா் எம். சண்முகம், தஞ்சை வெண்ணாறு வடிநில கோட்டச் செயற் பொறியாளா் என். ஆனந்தன், உதவி செயற்பொறியாளா்கள் ஆா். ரெத்தினவேலு, கே. சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க