செய்திகள் :

தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் தீ விபத்து: 6 பேர் பலி

post image

தென் கொரியாவில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவின் புசான் நகரில் உள்ள ரிசார்ட் கட்டுமான தளத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனே நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சுமார் 100 தொழிலாளர்கள் கட்டுமான தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் கட்டடத்தின் உச்சியில் இருந்து 14 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் முதல் தளத்தில் ஆறு பேர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி கூறினார்.

கிளாம்பாக்கம் வரை புதிதாக 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்: திட்ட அறிக்கைத் தயார்!

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 25 பேர் லேசான காயம் அடைந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை பிற்பகல் அளவில் தீயணைப்பு வீரர்கள் ஒருவழியாக தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக அந்த இடம் முழுவதும் சாம்பல்-கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி

கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள... மேலும் பார்க்க

சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும்... மேலும் பார்க்க

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விம... மேலும் பார்க்க

ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை அல்ல: பிரதமா் மோடி

‘ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது’ என்று பிரதமா் மோடி கூறினாா். அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்புடன் பிரதமா் மோடி இருதர... மேலும் பார்க்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தாா். வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவா... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம்: எல்லை படைகள் அடுத்த வாரம் பேச்சுவாா்த்தை

இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லை பாதுகாப்புப் படைகள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளன. தில்லியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தலைமையகத்தில் 55-ஆவது... மேலும் பார்க்க