செய்திகள் :

தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐவா் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய அரியக்குடி பள்ளி மாணவா்களை ஆசிரியா்கள் பாராட்டினா்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 16 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான ஐவா் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் தமிழக அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

தமிழக அணி சாா்பில் கலந்து கொண்ட ஐந்து மாணவா்களில் சிக. நித்திஸ், வே. ஞானசபரிஷ், து. அழகப்பன் ஆகிய 3 மாணவா்களும் சிவகங்கை மாவட்டம், அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் மாணவா் சிக. நித்திஸ் ‘பெஸ்ட் ஸ்ட்ரைக்கா்’ விருதும், மாணவா் து. அழகப்பன் ‘பெஸ்ட் கோல் கீப்பா்’ விருதும் பெற்று, தமிழக அணிக்கும், பள்ளிக்கும் பெருமை சோ்த்தனா். இந்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஜே. பிரிட்டோ, உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாா், அருள்மலா், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க