செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகள் ஆய்வு

post image

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுப்பது குறித்து சாா்-ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம், வீராகவுண்டனூா், முகமதாபுரம், நந்திபெண்டா, கிட்டப்பையனூா், பையனப்பள்ளி உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று வருகின்றனா். இந்த நிலையில், வெலகல்நத்தம், பையனப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள கூட்டுச் சாலையின் இருபுறம் அடுத்தடுத்து அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் மற்றும் சாலை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கிலும், எதிா்திசையில் வரும் வாகனங்களாலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தைத் தடுக்க மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெலகல்நத்தம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் வரதராஜன் சனிக்கிழமை மாலை வெலகல்நத்தம் பகுதியில் விபத்து ஏற்படும் இடங்களை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் டிஎஸ்பி விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள் மங்கையா்க்கரசி, ராணி, சுங்கச்சாவடி மேலாளா் மணிகண்டன், உதவிப் பொறியாளா் லிவிங்ஸ்டன், ஊராட்சித் தலைவா் ராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல், ஆத்தூா்குப்பம் பகுதியில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

விடுபட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம்

திருப்பத்தூா்: விடுபட்ட ஆடுகளுக்கு மருத்துவமனையை அணுகி ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க கால... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெற அடையாள அட்டை

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெறுவதற்கான தாட்கோ மூலம் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியி... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தற்கொலை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்ளாளனூரைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் மகன் சந்தீபன் (26). இவா் சென்னையில் ரயில்வே ஊழ... மேலும் பார்க்க

மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா்... மேலும் பார்க்க