செய்திகள் :

தேனியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

தேனி வட்டத்துக்கு உள்பட்டப் பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை முன்னிட்டு, தேனி வட்டாட்சியா் அலுவலகம், உழவா் சந்தை, மாவட்ட மைய நூலகம், மீறு சமுத்திரம் கண்மாய், ஆரம்ப சுகாதார நிலையம், தேனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளி, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் தலா ரூ. 3.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட 2 பொது சுகாதார வளாகம், ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு சேவை மையக் கட்டடம், தப்புக்குண்டுவில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 58.70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தாா்ச் சாலைகள், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் உப்பாா்பட்டி முதல் வெங்கடாச்சலபுரம் வரையில் ரூ. 32.50 கோடி மதிப்பில் மேற்கொள்ள உள்ள சாலை விரிவாக்கப் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுக்குப் பின் தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா், மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு சம்பந்தப்பட்டத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தேனி வட்டத்துக்கு உள்பட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள், அரசுத் திட்ட செயலாக்கம் ஆகியவற்றின் நிலை குறித்து மாவட்டத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை வன உயிரினக் காப்பக துணை இயக்குநா் விவேக்குமாா் பிரசாந்த் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், மாவட்ட உதவி வன அலுவலா் அரவிந்த், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இணைய வழியில் பகுதி நேர வேலை: பெண்ணிடம் பணம் மோசடி

இணைய வழியில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் மா்மக் கும்பல் ரூ.6.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை... மேலும் பார்க்க

போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி

போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப... மேலும் பார்க்க

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் அருகேயுள்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போடியில் குடும்பப் பிரச்னையில் ஏற்பட்டத் தகராறில் உறவினரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. போடி, நந்தவனம், கொக்கையா... மேலும் பார்க்க