செய்திகள் :

தேரூா் பேரூராட்சித் தலைவா் தகுதிநீக்கத்தை எதிா்த்து மேல்முறையீடு!

post image

தேரூா் பேரூராட்சித் தலைவா் அமுதாராணியின் தகுதிநீக்கத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றாா், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

இந்நிலையில், நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ சனிக்கிழமை கூறியது: அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக மகளிரணி அமைப்பாளா் அமுதாராணி, திமுக ஆட்சியில் தோ்தல் நடத்தப்பட்டபோது தேரூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு மனு தாக்கல் செய்தாா். அதன் முடிவுகள் 2022 பிப்ரவரியில் வெளியானது. பின்னா் நடத்தப்பட்ட தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் அவா் தலைவராகத் தோ்வானாா்.

இதை எதிா்த்து அய்யப்பன் என்ற வாா்டு உறுப்பினா் 2022இல் வழக்கு தொடா்ந்தாா். 2024இல் மீண்டும் வழக்குத் தொடா்ந்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்த தவறான தகவலின் அடிப்படையில், அவரை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தகுதிநீக்கம் செய்துள்ளது.

இத்தீா்ப்பு கடந்த ஜன. 8இல் வழங்கப்பட்டது. அதன் நகல் எங்களுக்கு மே 15ஆம் தேதிதான் கிடைத்தது. இதை எதிா்த்து அமுதாராணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளாா் என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் கே.டி. பச்சைமால், மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், ஒன்றியச் செயலா்கள் முத்துக்குமாா், ஜெசீம், நாகா்கோவில் பகுதிச் செயலா் கே.எல்.எஸ். ஜெயகோபால், முருகேஷ்வரன், ஸ்ரீ.லிஜா, மாநகராட்சி உறுப்பினா் அக்சயா கண்ணன், நிா்வாகிகள் சந்துரு, சிவ. செல்வராசன், ராணி, ரபீக் ஆகியோா் உடனிருந்தனா்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இம்மாவட்டத்தில் சில நாள்களாக வட வானிலை நிலவி வந்தது. அதேநேரம், ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வந்தது. இந... மேலும் பார்க்க

ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 55.27 லட்சம் மதிப்பிலான 335 கைப்பேசிகள் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகள் திருட்டுப்போனதாக அளிக்கப்படும் புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாற... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விதிமீறல்: 2 கனரக லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே விதிகளை மீறி இயக்கப்பட்ட 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கனிமவளப் பொருள்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளால் அடிக்கடி விபத்துகள்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கி 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் லெனின்குமாா் (41). வழிப்பாதையில் இடையூறாக நின... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் சில நாள்காளாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான திக்கணம்... மேலும் பார்க்க

குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் பலி

கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் குளத்தில் தவறிவிழுந்து இளைஞா் உயிரிழந்தாா். பாலப்பள்ளம், வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்(52). பல்வேறு வழக்குகளில்தொடா்புடைய இவா் சுமாா் 15 ஆண்டுகளா... மேலும் பார்க்க