செய்திகள் :

தேர்வு பயம் தீர...

post image

திருமாலின் மற்றொரு வடிவம்தான் வராகர். பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட உருவமாக பூமியை தனது கொம்பில் தாங்கி, காப்பதற்காக நாராயணன் உருவெடுத்தார். அரக்கனைக் கொன்று பூமியைக் காத்தார். இந்த ஊன உடம்புக்கு ஞானத்தை அருள வல்ல ஒரே தெய்வம் வராகர் எனும் ஞானபிரான் என்று ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கப்படுகிறது. பக்தர்கள், முக்தர்கள், நித்தியர்கள் என எல்லோருக்கும் மெய்யறிவு தரும் ஞானபிரான் வராகர்.

காஞ்சிபுரம், மேல்கோட்டை, திருநாராயணபுரம், மாமல்லபுரம், திருமலை, திருவிடந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட இடங்களில் வராகருக்கான கோயில்கள், சந்நிதிகள் அமைந்துள்ளன. சென்னை மயிலாப்பூரில் அருள்மிகு மாதவப்பெருமாள் கோயிலில் வராகப்பெருமாள் பூதேவித்தாயாரை காப்பாற்றிக் கொண்டுவரும் நிலையில் பரிவார சந்நிதி அமைந்துள்ளது.

இந்தச் சிறப்புடைய மாதவப் பெருமாள் கோயிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடையவும், பயமின்றி தேர்வை எதிர்கொள்ளவும், மனம் ஒன்றி படிக்கவும், சிறப்பு ஹோமமும், பூஜையும் பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகின்றன.

தொடர்புக்கு: 044 24985112.

}ஆர்.அனுராதா

தரணி போற்றும் தைப்பூச வழிபாடு

தை மாதத்தில், பூச நட்சத்திரத்தன்று பெüர்ணமியோடு சேர்ந்து வரும் நாள் தைப்பூச விழாவாகும். இந்த நாளில், மக்கள் புனித நீராடுவர். தேவாரங்களில் பூசம் தீர்த்தமாடும் பெருந்திருவிழாவாகவும் குறிக்கப்படுகிறது. வ... மேலும் பார்க்க

அருள் தரும் முருகன்

உறையூரைத் தலைநகராகக் கொண்டு, சோழர்கள் ஆண்டபோது வன விலங்குகளால் விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டது. வயலூரில் விலங்குகளை சிலர் வேட்டையாடியபோது, தாகம் ஏற்பட்டது. அங்கு மூன்று கிளையாக இருந்த கரும்பை அவ... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 7 - 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)திறமையும் தன்னம்பிக்... மேலும் பார்க்க

பிள்ளைப் பேறு கிடைக்க...

யமுனை நதிக்கரையில் வேதபுரத்தில் கருத்தமன் என்ற முனிவர் பிள்ளைப் பேறு இல்லாமல், சிவனை பிரார்த்தித்தார். குழந்தை பிறந்தபோது, "புண்டரீகர்' எனப் பெயரை முனிவர் சூட்டினார். பல்வேறு இடங்களில் உள்ள சிவத் தலங்... மேலும் பார்க்க

குறைகள் தீர....

சோழ மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட குறை நீங்க, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் பலன் கிட்டவில்லை. அவரது கனவில் திருமால் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருவூரகப் பெருமாளாக அருள் செய்வதாகவு... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும்...

அசுரர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க, பரிகாரம் கேட்டார் முருகன். அப்போது, "கீழ்வேளூரில் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கும் தன்னைச் சுற்றிலும் நவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும... மேலும் பார்க்க