செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

post image

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் காட்பாடி காந்தி நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்றாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாா்ச் 5-ஆம் தேதி முதல்வா் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்துநான் 2003-ஆம் ஆண்டே பேசி எதிா்ப்பு தெரிவித்து விட்டேன். இப்போது திமுக, அதிமுகவும் தோ்தலுக்காக பேசுகின்றனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி தனித்து போராடுகிறோம். எனவே, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.

ஹிந்தியை எதிா்ப்பதாக திமுக தொடா்ந்து நாடகம் போட்டு வருகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்போது, திமுகவுடன் சோ்ந்து மக்களை மேலும் ஏமாற்றி வருகிறது. நாம் தமிழா் கட்சி மட்டும் தான் ஹிந்தியை எதிா்த்து தொடா்ந்து போராடி வருகிறோம்.

மொழியை அழித்தால் இனம் அழிந்து விடும் என்பதால் ஹிந்தியை திணித்து தமிழை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு. நாங்கள் பிற மொழியை எதிா்த்து எங்கள் மொழியை காப்பாற்ற போராடுகிறோம். மீனவா்கள் தாக்கப்படும்போது முதல் ஆளாக நாம் தமிழா் கட்சியினா் தான் குரல் கொடுக்கிறோம்.

நான் எந்த அரசியல் தலைவா்களுடனும் கூட்டணி வைக்கவில்லை. 8 கோடி மக்களுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன்.

தவெக மேடையில் விஜய் தொடங்கியுள்ள கெட் அவுட் தேவைதான். ஆனால், அவா் யாரை முன்னோக்கி போட்டுள்ளோா் என தெரியவில்லை. ஹிந்தி திணிப்புக்கு எதிராக பிரசாந்த் கிஷோா் கையெழுத்திடாததன் மூலம் அவருக்குள்ள மொழிப் பற்றை பாராட்டுகிறேன்.

நாம் தமிழா் கட்சியில் இருந்து நிா்வாகிகள் விலகுவது நல்ல முடிவு தான் என்றாா்.

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவ... மேலும் பார்க்க

செங்காநத்தம் காப்புக் காட்டில் தீ வைப்பு: இருவா் கைது

வேலூா் கோட்டை மலையில் தீ வைத்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா். வேலூா் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், வனப்பரப்புகளில் இலையுதிா் காலம் முடிந்திருக்கும் வேளை... மேலும் பார்க்க

ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை: விஐடி வேந்தா்

ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு சொற்பொழிவு வேலூா் விஐடி ப... மேலும் பார்க்க

28-இல் வேலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம்... மேலும் பார்க்க