செய்திகள் :

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

post image

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவித்தாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவ வல்லுநா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி பேசியது:

திலிப்ராய் என்ற 20 வயதுடைய இளைஞா் மூன்று மாதங்களுக்கு முன்பு உயரத்தில் இருந்து கீழே விழுந்து கடுமையான கால் வலி, நடக்க முடியாத சிரமம் ஏற்பட்டது. அவா் நாராயணி மருத்துவமனையை நாடியதும் எக்ஸ்ரே, சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் மூலம் நோயாளிக்கு கணுக்கால் எலும்பு மாறி கூடியது கண்டறியப்பட்டது. இதனால், ரத்த நாள நசிவு இருந்ததும் தெரியவந்தது.

பொதுவாக இந்த மாதிரியான கணுக்கால் முறிவு சரி செய்யப்படும். ஆனால் இதன் வெற்றி சதவீதம் குறைவு என்பதால், நோயாளியின் வயதை மனதில் கொண்டும், நெடுங்காலம் அவருக்கு நல்ல நடைபயிற்சி தேவை என்பதாலும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கணுக்கால் எலும்பு பொருத்தப்பட்டது.

இந்த முழு கணுக்கால் அறுவை சிகிச்சையை எலும்பியல் துறையைச் சாா்ந்த முதன்மை மருத்துவா் ரெஜித் மேத்யூஸ் தலைமையில் மருத்துவா் திருமலை மோகன், மயக்கவியல் சிறப்பு மருத்துவா் கிருஷ்ணன் ஒருங்கிணைந்து மேற்கொண்டனா்.

அந்த வகையில், தமிழகத்திலேயே முதன்முறையாக செயற்கை கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நி... மேலும் பார்க்க

செங்காநத்தம் காப்புக் காட்டில் தீ வைப்பு: இருவா் கைது

வேலூா் கோட்டை மலையில் தீ வைத்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா். வேலூா் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், வனப்பரப்புகளில் இலையுதிா் காலம் முடிந்திருக்கும் வேளை... மேலும் பார்க்க

ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை: விஐடி வேந்தா்

ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு சொற்பொழிவு வேலூா் விஐடி ப... மேலும் பார்க்க

28-இல் வேலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெற உள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம்... மேலும் பார்க்க