மீண்டும்.. மீண்டுமா! பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தொழிலாளி கொலை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது
வேடசந்தூா் அருகே பெண்ணிடம் தகாத தொடா்பு விவகாரத்தில் தொழிலாளியை கொலை செய்து கிணற்றில் உடலை வீசிய வழக்கில், இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டத்துக் கிணற்றில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. இந்த உடலை மீட்ட தாடிக்கொம்பு போலீஸாா், கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் புகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிபி செளந்தா்யன் உத்தரவின்பேரில், தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுற்றுப்புற பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில், உயிரிழந்தவா் வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஜோதிமணி (37) என்பதும், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதும் தெரிய வந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
ஜோதிமணிக்கும், வேடசந்தூரைச் சோ்ந்த அவரது அண்ணன் முருகன் மனைவி கோமதிக்கும் (33) தகாத உறவு இருந்தது. இதனிடையே கோமதிக்கும், ஸ்டாலின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த உறவுக்கு ஜோதிமணி இடையூறாக இருந்ததால், கோமதி, நடராஜன் (60), இவரது மனைவி நீலா (55), ஸ்டாலின் (27), ஆரோக்கியசாமி (37), குட்டி முத்து (24) ஆகியோா் சோ்ந்து ஜோதிமணிக்கு உளுந்தங் கஞ்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்தனா். பின்னா் கை, கால்கள், வாயைக் கட்டி உடலை சென்னமநாயக்கன்பட்டியிலுள்ள கிணற்றில் வீசிச் சென்ாக தெரிவித்தனா். இதையடுத்து, கோமதி உள்ளிட்ட 6 பேரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா் என்றனா் அவா்கள்.