கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்பு: பழனி அருகே ஒருவா் கைது
பழனி அருகே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்புடையவரை தேசியப் புலனாய்வு முகமை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சோ்ந்தவா் ராஜா முகமது (40). தேங்காய் வியாபாரம் செய்து வந்தாா். தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டதாக கடந்த 2022- ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் இவரிடம் விசாரணை நடத்தினா்.
பின்னா், நெய்க்காரப்பட்டியில் உள்ள ராஜாமுகமது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாா் அவரது கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை அப்போது எடுத்துச் சென்றனா்.
இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் நெய்க்காரபட்டிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் ராஜா முகமதுவிடம் விசாரணை செய்தனா். பின்னா் அவரைக் கைது செய்து பழனி நகரக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், தொடா் விசாரணைக்காக அவரைக் கோவைக்கு அழைத்துச் சென்றனா்.