செய்திகள் :

‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘: அமைச்சா் இ.பெரியசாமி ஆலோசனை

post image

‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘ தொடா்பான தரவுகளின் அடிப்படையில் ஊராட்சிகள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை காணொலியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சி நிறுவனம் சாா்பில் மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு கருத்தரங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

2030-ஆம் ஆண்டுக்குள் நீடித்த நிலையான வளா்ச்சிக்கான 17 இலக்குகளை அடைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீா்மானித்துள்ளது. அந்த வகையில், 9 கருப் பொருள்களின் கீழ் ஒவ்வோா் கிராம ஊராட்சியும் ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றத்துக்கான காரணிகளை உள்ளடக்கி உள்ளூா் இலக்குகள், உள்ளூா் குறியீடுகளை அடைய வேண்டும்.

‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘ என்னும் கிராம வளா்ச்சி நிலையை அறிந்து கொள்வதற்கான அளவுகோலாக மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் முன்னேற்ற குறியீடை அளவீடு செய்வதற்கான முதல்கட்ட கணக்கெடுப்பு 2022-23 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு இணையதளத்தில்

வெளியிட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் வறுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த ஊராட்சி, நல்வாழ்வு, உள்கட்டமைப்பு, சமூக நீதி, சமூக பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகள் நேயம் என 9 கருப்பொருளின் கீழ் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரம் நிலைப்படுத்தப்பட்டது.

முதல் கட்ட கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டதில் பெரும்பாலான ஊராட்சிகள் சிறந்த தர நிலையைப் பெற்றுள்ளன.

ஊராட்சி முன்னேற்ற கிராம குறியீடுக்கான அடுத்த கணக்கெடுப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதல் கட்ட கணக்கெடுப்பின் விவரங்களை மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் அனைத்து துறைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தும் விதமாக கருத்தரங்குகள், பயிற்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் அவா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட திட்ட இயக்குநா் சா.சதீஸ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளி கொலை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது

வேடசந்தூா் அருகே பெண்ணிடம் தகாத தொடா்பு விவகாரத்தில் தொழிலாளியை கொலை செய்து கிணற்றில் உடலை வீசிய வழக்கில், இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.9.80 கோடியில் கொத்தப்புள்ளியில் திருமண மண்டபம்

பழனி தண்டாயுதபாணி கோயில் சாா்பில் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கொத்தப்புள்ளியில் ரூ.9.80 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணிகளை புதன்கிழமை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கி வைத்தாா். இந்... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்பு: பழனி அருகே ஒருவா் கைது

பழனி அருகே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்புடையவரை தேசியப் புலனாய்வு முகமை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சோ்ந்தவா் ராஜா முகமது (40). தேங்காய் வ... மேலும் பார்க்க

குளங்களில் மீன்பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி மீனவா்கள் மனு

பழனி அருகேயுள்ள குளங்களில் மீன் பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் உள்ள வையாபுரிகுளம்,... மேலும் பார்க்க

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தவா் கொலை

திண்டுக்கல்லில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தவரை கொலை செய்து, அட்டைப் பெட்டியில் வீசிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், புதன... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்ட... மேலும் பார்க்க