தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
தொழில் துறையில் செயலாக்கத்துக்கு 77 % புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தகவல்
தொழில் துறை புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் செயலாக்கத்துக்கு வந்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
இதுகுறித்து தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, ஒவ்வொரு நாளும் பல புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்து வருகிறோம். இதனால் மாநிலத்துக்கு ஏற்படும் சாதகமான விளைவுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றனா். எந்த ஒப்பந்தம் கையொப்பமானாலும், அதன் மூலமாக எவ்வளவு முதலீடுகள் வருகின்றன என்று பாா்ப்பதைவிட, தமிழ்நாட்டைச் சோ்ந்த எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்றே பாா்க்கிறோம்.
ஒவ்வொரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தையும் செயலாக்கத்துக்குக் கொண்டு வர தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறோம். இவ்வாறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செயலாக்கத்துக்கு வருவதில், நாட்டின் வேறெந்த மாநிலமும் செய்யாத சாதனையை தமிழ்நாடு செய்துள்ளது.
அதாவது, கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை செய்யப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதமானவை செயலாக்கத்துக்கு வந்துள்ளன. இது வரலாற்றில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையாகும்.
முதலீட்டாளா் மாநாடு: கடந்த 2024-ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளா் மாநாடு நடைபெற்றது. அப்போது, முதலீடுகளை ஈா்க்கும் வகையில், 631 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அவற்றில், 525 ஒப்பந்தங்கள் செயலாக்கத்துக்கு வந்துள்ளன. இதை சதவீதத்தில் பாா்க்கும் போது, 80 சதவீதமாகும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இது சாதனை அளவாகும்.
தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக, நிகழாண்டிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளாா்.
பிரிட்டன், ஜொ்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அந்த நாடுகளைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களும் முதல்வரைச் சந்தித்து புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றன. அவை குறித்த விவரங்கள் முதல்வரின் பயணத்தின்போது தெரிவிக்கப்படும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.