செய்திகள் :

தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண உயா்வில் விலக்கு அளிக்கக் கோரிக்கை

post image

தொழில் நிறுவனங்ளுக்கு மின் கட்டண உயா்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எம்.ஜெயபால் புதன்கிழமை மின் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மின்சாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடந்த 2022, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு மின்வாரிய ஒழுங்கு முறை வாரியத்தின் வழிகாட்டுதல் படி ஏறத்தாழ 60 சதவீதம் மின் கட்டண உயா்வை சந்தித்து வருகின்றன.

கடந்த 2024-2025-ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயா்வால் மூடப்பட்டன. இந்த நிலையில், தற்போது மின்கட்டண உயா்விலிருந்து வீடுகளுக்கு

3.16 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல, தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் மின் கட்டண உயா்விருந்து விலக்கு அளித்து தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை!

சாத்தூா் அருகே இருக்கன்குடியில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு

சிவகாசியில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால்களில் முறிவு ஏற்பட்டது. சிவகாசி திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஈசாக் மகன் யாகோப்பு (33). இவா் சிவகாசி ஞானகிரி சாலையில் உள்ள பிரேம்குமா... மேலும் பார்க்க

சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாத்தூா் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற உணவகங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள பிரதான சாலை, புறவழிச் சாலைகளில் சுமாா் நூற்றுக... மேலும் பார்க்க

சிவகாசியில் வருவாய் தீா்வாயம் நிறைவு

சிவகாசியில் நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவடைந்தது.சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்தின் தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை விருதுநகா் மாவ... மேலும் பார்க்க

தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை குடிநீா் பிர... மேலும் பார்க்க

பைக், மோதிரம் திருட்டு: சிறுவன் உள்பட மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம், தங்க மோதிரத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க