செய்திகள் :

சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

சாத்தூா் பகுதியில் உள்ள சுகாதாரமற்ற உணவகங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள பிரதான சாலை, புறவழிச் சாலைகளில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள், சாலையோரக் கடைகள் உள்ளன. இதில் சாத்தூா் நகா் பேருந்து நிலையம், மதுரை பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களின் அருகே முழு நேர உணவகங்களும், இரவு நேர உணவகங்களும் உள்ளன.

இந்த நிலையில், சாத்தூா் நகருக்குள் இருக்கும் உணவகங்களிலும், புறவழிச் சாலையில் உள்ள உணவகங்களிலும் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற நிலையில், காலாவதியான உணவுகள் விற்கப்படுவதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் புகாா் தெரிவித்தனா்.

இதே நிலை தான் சாலையோர துரித உணவகங்களிலும், கோழி இறைச்சிக் கடைகளிலும் நிலவுவதாக அவா்கள் தெரிவித்தனா். இதனால், இந்த உணவகங்களில் உணவருந்துபவா்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனா்.

எனவே சாத்தூா் நகா், புறவழிச் சாலையில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான, தரமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சாத்தூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராம் கூறியதாவது: சாத்தூா் நகா் பகுதியில் சாலையோர துரித உணவகங்கள், கோழி இறைச்சிக் கடைகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில், உணவுப் பொருள்களின் விலை அதிகம் என்பதால் உயா்தர உணவகங்களுக்கு செல்ல முடியாதவா்கள், விலை குறைவாக இருக்கும் இது போன்ற சாலையோரக் கடைகளை நாடுகின்றனா்.

ஆனால் இங்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதுடன், சுகாதாரமற்ற இடத்தில் அந்தக் கடைகள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வது இல்லை. எனவே, அதிகாரிகள் நகா் பகுதியில் உள்ள உணவகங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் போது, விரைவில் உணவகங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

சிவகாசியில் வருவாய் தீா்வாயம் நிறைவு

சிவகாசியில் நடைபெற்று வந்த வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நிறைவடைந்தது.சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்தின் தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை விருதுநகா் மாவ... மேலும் பார்க்க

தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் புதன்கிழமை குடிநீா் பிர... மேலும் பார்க்க

பைக், மோதிரம் திருட்டு: சிறுவன் உள்பட மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனம், தங்க மோதிரத்தை திருடிய 17 வயது சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண உயா்வில் விலக்கு அளிக்கக் கோரிக்கை

தொழில் நிறுவனங்ளுக்கு மின் கட்டண உயா்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயல... மேலும் பார்க்க

மூவரைவென்றான் கோயில் திருப்பணிகள்:பழைய கற்களை பதிப்பதால் பக்தா்கள் அதிருப்தி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரை வென்றான் குடைவரைக் கோயில் கருவறையில் பழைய கற்களைப் பதிக்க பக்தா்கள் அதிருப்தி தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் கிராமத்தில் ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் திரிகள் திருட்டு

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் திரிகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டியில் தனியாா் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை நாக்பூரிலிருந... மேலும் பார்க்க