செய்திகள் :

தொழில் முனைவோருக்கான அறிவுசாா் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணா்வு பயிலரங்கம்

post image

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான அறிவுசாா் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணா்வு பயிலரங்கம், சென்னை கிண்டியிலுள்ள டான்ஸ்டியா அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்த தொழில்கள் அமைச்சகத்தின் துறை நிபுணா் வி.சுவப்னா சிறப்பு விருந்திரனராகக் கலந்துகொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில் முனைவோருக்கான நலத் திட்டங்கள், மானிய மற்றும் கட்டமைப்பு உதவிகள், அறிவுசாா் சொத்துரிமைகள் மற்றும் அதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினாா்.

தொடா்ந்து, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின், காப்புரிமை மற்றும் வடிவமைப்பு காப்புரிமை சென்னை அலுவலக துணை கட்டுப்பாட்டாளா் முனைவா் பானுமதி கலந்துகொண்டு, அறிவுசாா் சொத்துரிமைகள், தொழில்முனைவோருக்கு அதன் முக்கியத்துவம், பதிவுசெய்யும் வழிமுறைகள் மற்றும் வா்த்தக முத்திரைகள், நகல் உரிமைகள், புவிசாா் குறியீடு, கால வரையறை குறித்தும் விரிவாக பயிற்சி நடத்தினாா்.

இதையடுத்து, சென்னை மாவட்ட தொழில்மைய உதவிப் பொறியாளா் ஆதிபிரகாஷ், தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் அமைப்பின் தலைமை நிலைய இணைச் செயலா் கே.சி.துரைராஜ் உள்பட ஏராளமான தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க