செய்திகள் :

தொழில்நுட்பக் கோளாறு: சிங்கப்பூர் விமானம் தாமதம்!

post image

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 164 பயணிகள் சிக்கித் தவித்தனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு பயணிகள் பெரும் அவதியைச் சந்தித்தனர். இதேபோன்று கோலாலம்பூர் புறப்பட்டுச் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணிகள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 164 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டுக் காத்திருப்போர் அறையில் அமர வைக்கப்பட்டனர்.

தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் விமான கோளாற்றைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கோளாறு சரிசெய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் விமான நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மாற்று விமானம் மூலம் அந்த பயணிகள் சிங்கப்பூர் நோக்கி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவரங்குறிச்சி அருகே மலைக் குன்றில் தீ

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி பரவியது. மருங்காபுரி ஒன்றியம், செவல்பட்டி ஊராட்சி, லிங்கம்பட்டி மற்றும் அக்கியம்பட்டி கிராமங்களிடையே அமைந்துள்ள கி... மேலும் பார்க்க

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 போ் கைது: தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு

நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வ... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில், திங்கள்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், கணக்கப்பிள்ளையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. பெரியசாமி (90). இவா் திங்கள்கிழமை இரவு இயற்கை உபா... மேலும் பார்க்க

டிஆா்இயூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் சங்கம் (டிஆா்இயூ) சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.திருச்சி பொன்மலை பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு க... மேலும் பார்க்க

காலமானாா் எழுத்தாளா் நந்தலாலா

திருச்சியைச் சோ்ந்த எழுத்தாளா், கவிஞா், பேச்சாளா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

நீதிமன்ற போராட்டம் மூலம் நீட் தோ்வுக்கு விலக்கு: அமைச்சா் கோவி. செழியன்

நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு பெறுவோம் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க