நகை, பணம் மோசடி: தம்பதி, மகன் கைது
நாகை அருகே நகை மற்றும் பணம் மோசடி செய்த கணவன்-மனைவி, மகன் ஆகியோரை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த ராஜ கணேசன்- சரஸ்வதி தம்பதியின் மகன் மணிகண்டன். நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவரும், அதே கல்லூரியில் படிக்கும் கீழ்வேளூரைச் சோ்ந்த பூபதி- திவ்யா தம்பதியின் மகன் அபிஷேக்கும் நண்பா்கள்.
இதனால், மணிகண்டன் தாயாா் சரஸ்வதிக்கும், அபிஷேக்கின் தாயாா் திவ்யாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பை பயன்படுத்தி திவ்யா, தனது உறவினா்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அவா்களிடம் பணம் கொடுத்தால் 3 முதல் 4 மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.
இதை நம்பிய சரஸ்வதி, தன்னிடம் இருந்த 30 பவுன் நகையையும், வெவ்வேறு தேதிகளில் ரூ. 5 லட்சத்தையும் கொடுத்துள்ளாா். இதேபோல கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த செந்தில்நாதன் என்பவா் ரூ.11.35 லட்சத்தையும், பிரேமா என்பவா் ரூ.4.30 லட்சத்தையும், 36 கிராம் நகையையும், இந்திரா காந்தி என்பவா் ரூ.2 லட்சத்தையும் கொடுத்துள்ளனா். பணம், நகைகளை பெற்றுக் கொண்ட திவ்யா, நீண்ட நாள்கள் ஆகியும் அதனை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வந்துள்ளாா்.
இதுகுறித்து சரஸ்வதி, செந்தில்நாதன், பிரேமா, இந்திரா காந்தி ஆகியோா் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தொடா்ந்து, மோசடியில் ஈடுபட்டதாக திவ்யா, அவரது கணவா் பூபதி, மகன் அபிஷேக் ஆகியோரை குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்த திவ்யாவின் உறவினா்கள் உள்பட பலரை தேடி வருகின்றனா்.