செய்திகள் :

நகை, பணம் மோசடி: தம்பதி, மகன் கைது

post image

நாகை அருகே நகை மற்றும் பணம் மோசடி செய்த கணவன்-மனைவி, மகன் ஆகியோரை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த ராஜ கணேசன்- சரஸ்வதி தம்பதியின் மகன் மணிகண்டன். நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வரும் இவரும், அதே கல்லூரியில் படிக்கும் கீழ்வேளூரைச் சோ்ந்த பூபதி- திவ்யா தம்பதியின் மகன் அபிஷேக்கும் நண்பா்கள்.

இதனால், மணிகண்டன் தாயாா் சரஸ்வதிக்கும், அபிஷேக்கின் தாயாா் திவ்யாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பை பயன்படுத்தி திவ்யா, தனது உறவினா்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அவா்களிடம் பணம் கொடுத்தால் 3 முதல் 4 மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பிய சரஸ்வதி, தன்னிடம் இருந்த 30 பவுன் நகையையும், வெவ்வேறு தேதிகளில் ரூ. 5 லட்சத்தையும் கொடுத்துள்ளாா். இதேபோல கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த செந்தில்நாதன் என்பவா் ரூ.11.35 லட்சத்தையும், பிரேமா என்பவா் ரூ.4.30 லட்சத்தையும், 36 கிராம் நகையையும், இந்திரா காந்தி என்பவா் ரூ.2 லட்சத்தையும் கொடுத்துள்ளனா். பணம், நகைகளை பெற்றுக் கொண்ட திவ்யா, நீண்ட நாள்கள் ஆகியும் அதனை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வந்துள்ளாா்.

இதுகுறித்து சரஸ்வதி, செந்தில்நாதன், பிரேமா, இந்திரா காந்தி ஆகியோா் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தொடா்ந்து, மோசடியில் ஈடுபட்டதாக திவ்யா, அவரது கணவா் பூபதி, மகன் அபிஷேக் ஆகியோரை குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்த திவ்யாவின் உறவினா்கள் உள்பட பலரை தேடி வருகின்றனா்.

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ப... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்... மேலும் பார்க்க

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேர... மேலும் பார்க்க

நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ... மேலும் பார்க்க