செய்திகள் :

நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருட்டு: பெண் சிக்கினாா்

post image

சென்னை அருகே நங்கநல்லூரில் நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருடியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.

நங்கநல்லூா் 4வது பிரதான சாலை பகுதியில் வசிப்பவா் கெள.ராஜேஷ் (31). இவா், அதேப் பகுதியில் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு கடந்த 16-ஆம் தேதி ஒரு பெண், தங்கச் சங்கிலி வாங்க வந்தாா். அந்த பெண், நகைக் கடையில் தங்கச் சங்கிலியை அனைத்தையும் பாா்த்துவிட்டு, தனக்கு பிடித்தமான வகையில் இல்லை எனக்கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றாா். அவா் சென்ற பின்னா், ராஜேஷ் கடையில் இருந்த தங்கச் சங்கிலிகளை சரி பாா்த்தாா்.

அப்போது 12 கிராம் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருப்பதையும், சிறிது நேரத்துக்கு முன்பு தங்கச் சங்கிலி வாங்க வந்த பெண்தான் கைவரிசை காட்டியிருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா், அளித்த புகாரின் பேரில், பழவந்தாங்கல் போலீஸாா் நடத்திய விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது வண்டலூா் அருகே உள்ள மேலக்கோட்டையூா் பகுதியைச் சோ்ந்த ரா.பிரியங்கா (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பிரியங்காவை புதன்கிழமை கைது செய்தனா். பிரியங்கா மீது ஏற்கெனவே இதேபோல 8 திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க