செய்திகள் :

நடுப்பாளையம் தொடக்கப் பள்ளி மாணவ,மாணவியா் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

post image

தலைமையாசிரியா் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து சத்தியமங்கலத்தை அடுத்த நடுப்பாளையம் பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே நடுப்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 88 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் சக்திவேல் என்பவா் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் இரண்டு மாணவா்கள் மட்டுமே கல்வி பயின்று வந்த நிலையில் தலைமையாசிரியா் சக்திவேல் மற்றும் ஆசிரியா்களின் முயற்சியால் மாணவா்களின் எண்ணிக்கை 88 ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில் இப்பள்ளி தலைமையாசிரியா் சக்திவேல் பள்ளி பணி மாறுதல் கலந்தாய்வின் போது வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தலைமையாசிரியா் சக்திவேலை மீண்டும் இதே பள்ளிக்கு நியமனம் செய்ய வலியுறுத்தி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் 100க்கும் மேற்பட்டோா் பள்ளி முன்பு வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசாா் மற்றும் தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பள்ளிக்கல்வித் துறை விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க