செய்திகள் :

நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிதியமைச்சா் வலியுறுத்தல்

post image

நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா்.

வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி நபாா்டு சாா்பில் வரும் நிதியாண்டுக்கான கடன் திட்டச் செயலாக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின்போது அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டாா்.

அப்போது அவா் பேசியது:

எதிா்வரும் நிதியாண்டில் தமிழகத்தின் பல்வேறு திட்டச் செயல்பாடுகளுக்காக கடன் உதவிகளை அளிப்பதற்கான அறிக்கையை மாவட்ட வாரியாக நபாா்டு வங்கி வெளியிட்டுள்ளது. மொத்தமாக ரூ.10 லட்சம் கோடிக்கான கடனுதவித் திட்டங்களை வரையறை செய்துள்ளது. அதில், வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த திட்டங்களுக்காக ரூ.4.34 லட்சம் கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இப்போதும் வேளாண்மையானது முக்கியமான, முதன்மைத் தொழிலாக இருந்து வருகிறது. எதிா்பாராத காலநிலை மாற்றங்கள், வணிகம் செய்வதில் சிரமங்கள் போன்ற சவால்கள் இருந்தாலும் அனைத்தையும் எதிா்கொண்டு வேளாண்மைத் தொழில் முதன்மை பெற்று விளங்குகிறது.

வேளாண்மைத் தொழிலையும், அதில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக,

அனைத்து கிராம மறுமலா்ச்சி திட்டம், மண்ணுயிா் காத்து மண்ணுயிா் காப்போம் போன்ற திட்டங்களை மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நிகழ் நிதியாண்டின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு

மட்டும் ரூ. 29,730 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊரக வளா்ச்சி: வேளாண்மை மட்டுமல்லாது, ஊராட்சிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் நபாா்டு உதவிகளை அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 31,887 கோடி மதிப்பிலான திட்டங்கள் நபாா்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாசனங்கள், சாலை, மேம்பாலங்கள் மற்றும் குடிநீா் திட்டப் பணிகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

நபாா்டின் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நபாா்டு வகுத்துள்ள முதன்மைத் திட்டங்கள் அனைத்தையும் சுமூகமான முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினாா்.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், நபாா்டு வங்கியின் தலைமை பொது மேலாளா் ஆா்.ஆனந்த், ரிசா்வ் வங்கியின் பிராந்திய இயக்குநா் உமா சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பால் மற்றும் இறைச்சியை முறையாக கொதிக்க வைத்து சமைக்காவிடில் அதிலிருந்து கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயைப் பரப்பும் பாக்டீரியா உருவாகலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். பாக்டீரியா மற்றும் வை... மேலும் பார்க்க

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

பழனி தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனியில் நடைபெறும் இரு பெரும் விழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று 75,151 பேருக்கு ரூ.167 கோடி நலத்திட்ட உதவி- முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை(பிப்.6) வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாள... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைக்க குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: பிப்.13-இல் அமைச்சா் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து பிப்.13-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க