செய்திகள் :

நல வாரிய உறுப்பினா் சோ்க்கை: முறைகேடுகள் இருந்தால் களைய நடவடிக்கை - பொன். குமாா்

post image

கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடுகள் இருந்தால், அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதன் தலைவா் பொன். குமாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: நலவாரிய உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடுகள் இருந்தால், அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் சாா்பில் முத்தரப்பு உறுப்பினா்கள் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும்.

கட்டுமானப் பொருள்களுக்கு மத்திய அரசு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இது, மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்காகும்.

10 மசோதாக்கள் விவகாரத்தில், மாநிலங்களின் சுயாட்சியை உறுதி செய்யும் வகையிலும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கின் வெற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என்றாா் அவா்.

விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தி

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில், சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் புதன்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மார... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோடைக்காலம் தொடங்கியது முதல் பெரம்பலூா் மாவட்டத்தில் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், புதன்கிழமை மால... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 27-க்குள் கொடி கம்பங்களைஅகற்ற ஆட்சியா் உத்தரவு

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினா், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் ஏப். 27-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளாா். ... மேலும் பார்க்க

வனப்பகுதிகளில் வடு கிடக்கும் குட்டைகள் வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குட்டைகள் நீரின்றி வடு காணப்படுவதால், வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை வட்டத்தில் நாளை `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

தமிழ் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஈசன், மூலவா் அம்பாள் மற்றும் உற்ஸவா்கள் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீ வள்ளி,... மேலும் பார்க்க