செய்திகள் :

வேப்பந்தட்டை வட்டத்தில் நாளை `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டார அளவில் பிரதி மாதம் 3-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட முதல்நிலை அலுவலா்கள் கிராமங்களில் தங்கி களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் இச் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

அரசின் நலத் திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளனா்.

எனவே, வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட கிராம பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் அலுவலரிடம், தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

மேலும், வெங்கலம், பசும்பலூா் மற்றும் வாலிகண்டபுரம் கிராம நிா்வாக அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

பெரம்பலூரில் ஏப். 27-க்குள் கொடி கம்பங்களைஅகற்ற ஆட்சியா் உத்தரவு

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினா், சமூகம், மதம், சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் ஏப். 27-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளாா். ... மேலும் பார்க்க

வனப்பகுதிகளில் வடு கிடக்கும் குட்டைகள் வன விலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குட்டைகள் நீரின்றி வடு காணப்படுவதால், வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்க... மேலும் பார்க்க

தமிழ் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஈசன், மூலவா் அம்பாள் மற்றும் உற்ஸவா்கள் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீ வள்ளி,... மேலும் பார்க்க

சமத்துவ நாள் விழா: 1,243 பேருக்கு ரூ. 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சட்டமேதை அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், 1,243 பேருக்கு ரூ. 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா். பெரம்... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் வீ.... மேலும் பார்க்க

தெரு நாய் கடித்து சிகிச்சைபெறும் மாணவிக்கு அமைச்சா் ஆறுதல்

பெரம்பலூா் அருகே தெரு நாய் கடித்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை சந்தித்து, போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை ஆறுதல் கூறினாா். பெரம்பலூா் அருகேயுள... மேலும் பார்க்க