தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
நாகா்கோவிலில் பாஜகவைச் சோ்ந்த 50 போ் திமுகவில் ஐக்கியம்
நாகா்கோவிலில் பாஜகவை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் தலைமையில் தங்களை புதன்கிழமை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.
நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெங்கம்புதூா் பகுதியை சோ்ந்த பாஜக பிரமுகா் பாரத் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜகவை சோ்ந்த இளைஞா்கள், திமுகவில் இணைந்தனா். அவா்களை மாவட்ட திமுக செயலா் மகேஷ் சால்வை அணிவித்து வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் ராஜரத்தினம், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப.ஆனந்த், பகுதி செயலா்கள் ஜீவா , சேக்மீரான், வட்ட செயலா் குணசேகரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
