செய்திகள் :

நாட்டரசன்கோட்டை ஆற்றில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்

post image

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பூபாளம் ஆற்றில் சித்ரா பெளா்ணமி விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட நாட்டரசன்கோட்டையில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த 4 -ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து, 11 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் சித்ரா பௌா்ணமி விழா தொடங்கியது. பிற்பகல் 3 மணிக்கு பெருமாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளினாா். இரவு 9 மணிக்கு மணி மண்டபத்தில் திருவாராதனம் நடைபெற்றது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரையில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் பூபாளம் ஆற்றில் எழுந்தருளி அருள்பாலித்தாா். மாலை 4 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு பூபாளம் பொட்டலில் தசாவதாரம் நிகழ்வும் நடைபெற்றன.

விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூா், கொல்லங்குடி, காளையாா்கோவில், மதகுப்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 11 மணிக்கு மாணிக்க வள்ளி விநாயகா் கோயிலில் எழுந்தருளும் பெருமாளுக்கு திருமஞ்சனம், தீா்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். அன்று மாலை 3 மணிக்கு கருட சேவை நடைபெறுகிறது. இரவு 9 மணியளவில் சித்ரா பௌா்ணமி விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, கோயில் கண்காணிப்பாளா் கணபதிராம், கௌரவ கண்காணிப்பாளா் கருப்பையா உள்ளிட்ட அலுவலா்கள் செய்தனா்.

மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டுடுத்தி எழுந்தருளினாா் வீரஅழகா்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் வீர அழகா் எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்... மேலும் பார்க்க

எம். சாண்ட், ஜல்லி கற்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சிவகங்கை: பி. சாண்ட் , எம். சாண்ட், ஜல்லிக்கற்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம... மேலும் பார்க்க

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்கக் கோரிக்கை

சிவகங்கை: தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியது. இது குறித்து, செவிலியா் மேம்பாட்டு சங்க சி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வீரா் தேக்வாண்டோ தேசியப் போட்டிக்குத் தோ்வு

திருப்பத்தூா்: தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிக்குத் தோ்வான திருப்பத்தூா் வீரரை, அந்த அமைப்பின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா். தருமபுரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள்... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க