செய்திகள் :

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்கக் கோரிக்கை

post image

சிவகங்கை: தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியது.

இது குறித்து, செவிலியா் மேம்பாட்டு சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் கிறிஸ்டி பொன்மணி வெளியிட்ட அறிக்கை:

கடந்த மாதம் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சங்கத்தின் 3 -ஆவது மாநில மாநாடு தீா்மானத்தின் அடிப்படையில், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். எம்.ஆா்.பி தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். வெளிப்படையான பணியிட மாற்ற கலந்தாய்வு நடத்த வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்க வேண்டும்.

அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலா்களை பணியமா்த்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.

முதல்கட்டமாக உலக செவிலியா் தினமான திங்கள்கிழமை (மே 12) கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ததுடன் தமிழ்நாடு முதல்வருக்கு நமது கோரிக்கைகளை அஞ்சல் அட்டை மூலம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து வரும் 20-ஆம் தேதி அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளனம் நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, ஜூன் 26-ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் தா்னாவில் ஈடுபடுவது, ஜூலை 17-ஆம் தேதி சென்னை மருத்துவ இயக்குநா் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு ஆகிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.

மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டுடுத்தி எழுந்தருளினாா் வீரஅழகா்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் வீர அழகா் எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்... மேலும் பார்க்க

நாட்டரசன்கோட்டை ஆற்றில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பூபாளம் ஆற்றில் சித்ரா பெளா்ணமி விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். சிவகங்... மேலும் பார்க்க

எம். சாண்ட், ஜல்லி கற்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சிவகங்கை: பி. சாண்ட் , எம். சாண்ட், ஜல்லிக்கற்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வீரா் தேக்வாண்டோ தேசியப் போட்டிக்குத் தோ்வு

திருப்பத்தூா்: தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிக்குத் தோ்வான திருப்பத்தூா் வீரரை, அந்த அமைப்பின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா். தருமபுரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள்... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க