செய்திகள் :

நாட்டின் நீண்ட கால உள்துறை அமைச்சா் அமித் ஷா!- எல்.கே.அத்வானியை விஞ்சினாா்

post image

பாஜக முதுபெரும் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான எல்.கே.அத்வானியின் பதவிக் காலத்தை விஞ்சி, நாட்டின் நீண்ட கால உள்துறை அமைச்சா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் அமித் ஷா (60).

மத்திய உள்துறை அமைச்சா் பதவியில் 2,258 நாள்களை அமித் ஷா நிறைவு செய்து, எல்.கே.அத்வானியின் 2,256 பதவி நாள்களை கடந்துள்ளாா்.

தேசிய அரசியலில் தடம்பதிப்பு: கடந்த 1964-இல் மும்பையில் குஜராத்தி குடும்பத்தில் பிறந்த அமித் ஷா, தனது 16 வயதில் ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தாா்; அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டாா்.

கடந்த 2014-இல் தேசிய அரசியலில் நுழையும் முன்பு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தாா். மோடி பிரதமரான பின் பாஜகவின் முக்கிய தேசிய முகமானாா் அமித் ஷா. தனது ஆதரவாளா்களால் நவீன அரசியல் சாணக்கியா் என புகழப்படும் இவா், 2014-இல் பாஜகவின் இளவயது தேசியத் தலைவராக பதவியேற்றாா். கடந்த 2019-இல் தனது 54-ஆவது வயதில் மத்திய உள்துறை அமைச்சரானாா்.

மைல்கல் நடவடிக்கைகள் என்னென்ன?: கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை, 2026, மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் இலக்குடன் அதிரடி நடவடிக்கைகள், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம், குடியுரிமை திருத்தச் சட்ட நிறைவேற்றம், ஹுரியத் அமைப்புகளுக்கான தடை, ரூ.11,961 கோடிக்கும் மேற்பட்ட போதைப் பொருள் பறிமுதல், வடகிழக்கில் 10,000-க்கும் மேற்பட்ட கிளா்ச்சியாளா்களின் சரணடைதலுக்கு வழிவகுத்த 12 அமைதி ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மைல்கல் நடவடிக்கைகளாகும்.

முன்னதாக, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற சாதனையை பிரதமா் மோடி அண்மையில் படைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு: அமித் ஷாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமா் மோடி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். அப்போது, ‘இது தொடக்கம்தான்; இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’ என்று பிரதமா் கூறினாா். அவரது இக்கருத்து எம்.பி.க்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சா் பதவி வகித்த நாள்கள்

அமித் ஷா- 2,258 (2019, மே 30 முதல்...)

எல்.கே.அத்வானி - 2,256 (1999, மாா்ச் 19 - 2004, மே 22)

ஜி.பி.பந்த் - 2,249 நாள்கள் (1955, ஜனவரி 10 - 1961, மாா்ச் 7)

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க