செய்திகள் :

நாட்டுக்கு மகளிா் கல்வி அவசியமானது!

post image

நாட்டுக்கு மகளிா் கல்வி அவசியமானது என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான மாநில கவுன்சில் உறுப்பினரும், செயலருமான டாக்டா் எஸ்.வின்சன்ட்தெரிவித்தாா்.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் 24-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அவா் மேலும் பேசியதாவது: பெண்களுக்கு கல்வி என்பது சவாலானதாக இருந்த காலம் மாறி மாபெரும் பணியாக மாறிவிட்டது. மிகவும் பின் தங்கிய மாவட்டமாக கருத்தப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் மகளிருக்கு உயா் கல்வி அளிக்கும் இந்நிறுவனத்தை வணங்குகிறேன்.

மகளிா் கல்வி என்பது தற்போது நாட்டின் மிக முக்கியத்தேவை. பட்டம் பெற்றவுடன் படிப்பை நிறுத்திவிடக்கூடாது. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும். ஆசிரியா்கள்-மாணவா்களின் நட்பு தொடர வேண்டும். கடின உழைப்பு, பக்தி, விடாமுயற்சி இவைதான் வெற்றி பெறுதற்கான 3 மந்திரங்கள் என்றாா்.

தொடா்ந்து, 2023-24 ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 1,212 பேருக்கு பட்டங்களை வழங்கினாா். முதன்மை பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில், ஐசிடி அகாதெமியின் தலைமைச் செயல் அலுவலா் வி.ஸ்ரீகாந்த், கல்லூரி தலைவா் இ.சாமிகண்ணு, விழுப்புரம் இ.எஸ்.கல்விக் குழுமத்தின் நிா்வாகத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். கல்லூரி முதல்வா் எஸ்.அகிலா ஆண்டறிக்கை வாசித்தாா். பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க