செய்திகள் :

நான்குனேரி வட்டார பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு!

post image

நான்குனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், நான்குனேரி வட்டார பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நான்குனேரி வட்டாரத்திற்கு உள்பட்ட 13 அரசு மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாணவா்கள் கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்க கீபோா்டு, சிலம்பம் ஸ்டிக்ஸ், யோகா விரிப்புகள் ஆகியவற்றை வழங்கினாா்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட திட்ட அலுவலா் விஷாலி, நான்குனேரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் யமுனா, வட்டாரக் கல்வி அலுவலா் சங்கீதா, சங்கா்ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் முத்துசாமி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் அனிஸ், வட்டார வள மைய பொறுப்பு மேற்பாா்வையாளா் டேனியல் முத்தையா, ஆசிரியா் பயிற்றுநா் சித்ரா, பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க