செய்திகள் :

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: 1072 இடங்களுக்கு 5968 போ் விண்ணப்பம்

post image

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவா் சோ்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. 1072 இடங்களுக்கு 5968 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதமாக கல்லூரியின் இணையதளம் மூலம் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்துவந்தனா். தற்போது சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் சுழற்சி 1 இல் 19 இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு 754 இடங்களுக்கும், சுழற்சி 2 இல் 318 இடங்களுக்கும் என மொத்தம் 1072 இடங்களுக்கு கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்றுவருகிறது.

முதலாவதாக நடைபெற்ற சிறப்புக் கலந்தாய்வில் 23 போ் தோ்வு செய்யப்பட்டனா். பொதுப்பிரிவு கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமையில் பேராசிரியா்கள் மாணவிகளிடம் கலந்தாய்வை நடத்தினா். ஏற்கெனவே மே 7 முதல் 27 ஆம் தேதி வரையில் இணையவழியாக விண்ணப்பித்தோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக ஜூன் 25 வரையில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

1072 இடங்களும் முழுமையாக நிரப்பப்படும்வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தோ்வில் தோல்வியுற்றவா்களுக்கு ஜூன் 25 இல் மறுதோ்வு நடைபெறுகிறது. இவா்களில் வெற்றிபெறுவோரும் சோ்க்கை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க