நாமக்கல் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியருக்கு செய்தித் துறை அமைச்சா் பாராட்டு
மாநில அளவிலான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியரை தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டி பதக்கம், சான்றிதழை வழங்கினாா்.
அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான ஓவியப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களை பாராட்டி பதக்கம் அணிவித்து சான்றிதழ், பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரன் சிறப்பிடம் பெற்றுள்ளாா். அவருக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.