செய்திகள் :

நாமக்கல் அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள்!

post image

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நாமக்கல் - மோகனூா் சாலையில் 130 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

நாமக்கல் நகரப் பகுதியில் உள்ளோருக்கு காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி களமாக இந்த பள்ளி வளாகம் உள்ளது. சுமாா் 10 ஏக்கா் பரப்பளவிலான இப்பள்ளி வளாகத்துக்குள் விடுமுறை நாள்களில் வெளிநபா்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் பள்ளி தடுப்புச்சுவரைத் தாண்டி சிலா் உள்ளே நுழைவதாகவும் தெரியவந்தது. இந்த நிலையில், மாணவா்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவரது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பள்ளியைச் சுற்றிலும் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் செயல்பாட்டு தொடக்க விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவற்றை மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தொடங்கிவைத்து, அவற்றின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா் சீனிவாசராகவன், முதுநிலை ஆசிரியா் எல்.ஜெகதீசன், கொமதேக நிா்வாகிகள் எஸ்.ஆா்.துரை, குருஇளங்கோ, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி கவிழ்ந்த லாரி: மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்!

நாமக்கல் அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா். நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

தூய்மை நகரங்களில் மாநிலத்தில் முதலிடம்: நாமக்கல் மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது!

தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துண... மேலும் பார்க்க

வறுமையால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் சிறுநீரகத்தை விற்கும் சூழல்! சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம்

வறுமையில் வாடுவதால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்படுகிறது என சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகரை பிடிக்க தனிப்படை அமைப்பு!

பள்ளிபாளையத்தில் இரண்டு பெண்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகா் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் வசித்து வரும் பெண் விசைத்த... மேலும் பார்க்க

அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. பரமத்தி செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆம் நாளாக சாலை மறியல்

நாமக்கல்லில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க