ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகரை பிடிக்க தனிப்படை அமைப்பு!
பள்ளிபாளையத்தில் இரண்டு பெண்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகா் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் வசித்து வரும் பெண் விசைத்தறி தொழிலாளா்கள் இருவரிடம் அதிகளவில் பணம் தருவதாகக் கூறி, திருப்பூரைச் சோ்ந்த இடைத்தரகரான ஆனந்தன் என்பவா் அவா்களை திருச்சிக்கு அழைத்துச் சென்று தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தை பெற்று குறைந்த அளவில் பணத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியான நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்பேரில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை சிறுநீரக இடைத்தரகா் ஆனந்தன் வசித்து வந்த பள்ளிபாளையம் சத்யா நகா் பகுதியில் விசாரணை மேற்கொண்டனா். அவரை கைதுசெய்யக் கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்திலும் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் அவா்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஆனந்தனை பிடிக்க பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூா், சென்னை, திருச்சி, ஈரோடு பகுதிகளில் ஆனந்தன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்கிடையே, சென்னையைச் சோ்ந்த மருத்துவ நலப் பணிகள் சட்டப்பிரிவு இணை இயக்குநா் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினா் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டதாகவும், சிறுநீரகம் வழங்கிய விஜயா, கெளசல்யா ஆகிய இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி பகுதிகளில் உள்ள தனியாா் சிறுநீரக மருத்துவமனைகளிலும் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.