ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
நாமக்கல் கோட்டை துணை அஞ்சலகம் மூடல்
நாமக்கல்: நாமக்கல் கோட்டை துணை அஞ்சலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கோட்டை சாலையில் இயங்கி வந்த துணை அஞ்சலகம் திங்கள்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த அலுவலகத்தில் தொடங்கப்பட்ட கணக்குகள் அனைத்தும் நாமக்கல் தலைமை அஞ்சலகத்துடன் இணைக்கப்படுகின்றன. எனவே, வாடிக்கையாளா்கள் தங்களுடைய கணக்குகளில் பணம் செலுத்தவும், பெறவும் மற்றும் அஞ்சல் தொடா்பான அனைத்து சேவைகளை பெறவும் நாமக்கல் தலைமை அஞ்சலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.