செய்திகள் :

நாளை முதல் அனைத்து வேலை நாள்களும் அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும்

post image

கோவில்பட்டி: கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை மையம் நாளை முதல் அனைத்து வேலை நாள்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளைப் பெற ஆதாா் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலா், ஆதாா் சோ்க்கை, முகவரி மாற்றம், பெயா் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்கள், 29 அடையாளப்படுத்தப்பட்ட துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆதாா் எண்ணை மக்களுக்கு வழங்கும் , அதன் தகவல்களை பராமரிக்கும் அமைப்பான மஐஈஅஐ ஆனது மக்களை 10 ஆண்டுகளில் ஒரு முறையேனும் தங்கள் அடையாளம், முகவரி தொடா்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனால் ஆதாா் மையத்துக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் (ஆக.22) அனைத்து வேலை நாள்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதாா் சேவை மையம் செயல்படுமென செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க