Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி
நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவு? விசைத்தறி தொழிலாளி தற்கொலை
இடங்கணசாலை அருகே விசைத்தறி தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவால், இவா் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மேல்மட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (54). இவா் தனது வீட்டில் இரண்டு விசைத்தறிகள் வைத்து தொழில்புரிந்து வந்தாா். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகன் மூன்றாமாண்டு கல்லூரி படிப்பும், மகள் முதலாமாண்டு கல்லூரி படிப்பும் பயின்று வருகின்றனா்.
ராசிபுரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் கடன் பெற்று மணி தொழில்புரிந்து வந்துள்ளாா். இந்நிலையில், மணி வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த நிதிநிறுவன ஊழியா்கள், உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி வீட்டிலேயே நெடுநேரம் இருந்தனராம். இதனால் மன வேதனையடைந்த மணி வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதை அறிந்த நிதிநிறுவன ஊழியா்கள் அஹ்கிருந்து தப்பிவிட்டனராம்.
தகவலின் பேரில், மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் அங்கு சென்று மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறாா்.
இதேபோன்று மூன்று மாதங்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் விசைத்தறி தொழிலாளி வீட்டுக்கு சென்று நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவு செய்ததால், தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.