செய்திகள் :

நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவு? விசைத்தறி தொழிலாளி தற்கொலை

post image

இடங்கணசாலை அருகே விசைத்தறி தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவால், இவா் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மேல்மட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (54). இவா் தனது வீட்டில் இரண்டு விசைத்தறிகள் வைத்து தொழில்புரிந்து வந்தாா். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகன் மூன்றாமாண்டு கல்லூரி படிப்பும், மகள் முதலாமாண்டு கல்லூரி படிப்பும் பயின்று வருகின்றனா்.

ராசிபுரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் கடன் பெற்று மணி தொழில்புரிந்து வந்துள்ளாா். இந்நிலையில், மணி வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த நிதிநிறுவன ஊழியா்கள், உடனடியாக பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி வீட்டிலேயே நெடுநேரம் இருந்தனராம். இதனால் மன வேதனையடைந்த மணி வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதை அறிந்த நிதிநிறுவன ஊழியா்கள் அஹ்கிருந்து தப்பிவிட்டனராம்.

தகவலின் பேரில், மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் அங்கு சென்று மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறாா்.

இதேபோன்று மூன்று மாதங்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் விசைத்தறி தொழிலாளி வீட்டுக்கு சென்று நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவு செய்ததால், தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க