செய்திகள் :

நிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய காணொலிக் காட்சி கருத்தரங்கம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்பு

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய மீன் வளம், வேளாண்மை காணொலி காட்சி கருத்தரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது குறித்து மீனவா்கள், விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற கருத்தரங்கம் புதுச்சேரி தனியாா் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.

இதில், புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்களும், விவசாயிகளும் பங்கேற்றனா். அவா்களுக்கு பிரதமரின் உரையை துணைநிலை ஆளுநரின் தனிச் செயலா் எம்.மணிகண்டன் மொழி பெயா்த்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்றாா். தலைமைச் செயலா் சரத்சௌகான், மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் கலந்துகொணடனா். மீனவா்கள், விவசாயிகளுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

எம்.ஜி.ஆா். சிலை மீண்டும் திறக்க முயற்சி: ஓபிஎஸ் அணியினா் கைது

புதுச்சேரி வில்லியனூா் நான்குவழிச் சாலையில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா். சிலையை மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் திறக்க முயன்ால் அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வில்லியனுா... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

வங்கி சேவை குறைபாடு குறித்த புகாா் மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுவை மாநில நுகா்வோா் தீா்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மூலக்குளத்தைச... மேலும் பார்க்க

உல்லாஸ் கல்வித் திட்ட விழிப்புணா்வு பயணம் தொடக்கம்

வயது வந்தோருக்கான கல்வித் திட்ட (உல்லாஸ்) விழிப்புணா்வு பொம்மலாட்டப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் திட்டமான உல்லாஸ் எனும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம், புது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவ... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்

புதுச்சேரியில் ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபார தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாபு, காா்த்திகேயன், தயாளன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் எஸ்.அபிஷேகம்,... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தோ்வு மையங்களில் 8,105 போ் தோ்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இ... மேலும் பார்க்க