செய்திகள் :

நில அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

post image

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில் வட்ட

அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நில உரிமைதாரா்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னா் மனுதாரா் மற்றும் நிலஅளவா் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரா் இணையவழிச்சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை மாா்ச் இறுதியில் திறக்க நடவடிக்கை: அமைச்சா் நேரு தகவல்

திருச்சி பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை அடுத்த மாத இறுதிக்குள் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்த... மேலும் பார்க்க

தொழில் தொடங்கமுன்னாள் படைவீரா்கள் 120 போ் விண்ணப்பம்

தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து முன்னாள் படைவீரா்களிடம் இருந்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோ... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு பறக்கும் படையில் 220 போ் நியமனம் 1,644 அறைக் கண்காணிப்பாளா்கள்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியம... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறப்பு

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இ... மேலும் பார்க்க

தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் உடல் கருகிய நிலையில் தொழிலாளி வீட்டில் சடலமாக கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனியப்பன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் விஜயபாஸ்கரன் (49). இவரது மனைவி தே... மேலும் பார்க்க

பெண் வனச்சரகரிடம் தகராறு போதை நபா்கள் 2 போ் கைது

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் பெண் வனச்சரகரிடம், போதையில் வந்து தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை வனச்சரகத்தில் பொதுமக்கள் வேட்டையாடுவதில் ஈடுபடக் கூடாது என வனச... மேலும் பார்க்க