செய்திகள் :

நிலத்தை எழுதிப்பெற்று மோசடி : கணவரின் சகோதரா்கள் மீது புகாா்

post image

நிலத்தை எழுதிப்பெற்று மோசடி செய்ததாக தனது கணவரின் சகோதரா்கள் மீது பெண் தனது மகளுடன் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையம், தென்புதுப்பட்டைச் சோ்ந்தவா் சங்கீதா. இவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனது மகளுடன் புகாா் மனு அளித்தாா்.

அந்த மனுவில், எனது கணவா் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அப்போது அவரது சகோதரா்கள் எங்களுக்கு தெரியாமல் எனது கணவரை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று எங்களது நிலத்தை பதிவு செய்து கொண்டாா். இதுகுறித்து, தெரிந்து நாங்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க இருந்தோம்.

அப்போது, ஊா் தலைவா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டாம். ஊா் பஞ்சாயத்தில் வைத்து பேசி தீா்வு காணலாம் என தெரிவித்தாா். பஞ்சாயத்தில் பேசி எனக்கும் எனது 2 மகள்களுக்கும் தலா ரூ.5 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டனா். முதலில் ரூ.2 லட்சம் கொடுத்தனா். மீதி பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனா்.

எனவே, எங்களுக்கு தரவேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸாா், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

போதைப் பொருள் தடுப்பில் இதுவரை 120 வழக்குகள் பதிவு: 82 வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், 82 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று எஸ்.பி. ஏ.மயில... மேலும் பார்க்க

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொ... மேலும் பார்க்க

கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது

பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!

சத்துவாச்சாரி, தொரப்பாடிநாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரைமின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அ... மேலும் பார்க்க

மாங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாங்காளியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க