செய்திகள் :

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தாமதத்துக்கு எதிரான மனுக்கள்: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

post image

நீதிபதிகள் நியமனத்துக்கான பெயா்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் அனுப்பிய பிறகும், அதற்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு தொடா்ந்து தாமதித்து வருவதை கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலீஜியம் பரிந்துரைக்கும் நபா்களை நீதிபதிகளாக மத்திய அரசு நியமனம் செய்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்ற மத்திய அரசு முயற்சித்தது. ஆனால், கொலீஜியம் நடைமுறையை சரியானது. அந்த நடைமுறையே தொடரும் என உச்சநீதிமன்றம் திட்டவிட்டமாக தெரிவித்தது. இதன் காரணமாக, இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கும் - உச்சநீதிமன்றத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக, நீதிபதிகள் நியமனம் தொடா்பான கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு அவ்வப்போது தாமதம் செய்து வருகிறது. இதை உச்சநீதிமன்றமும் பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசின் இந்த தாமதத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்துவந்தன.

இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்துக்கான பெயா்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் அனுப்பிய பிறகும், அதற்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு தொடா்ந்து தாமதித்து வருவதை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தத்தாா், ‘நீதிபதி நியனமத்துக்கு சிலரின் பெயா்களை முதலில் 2019-ஆம் ஆண்டிலும், பின்னா் 2020 மற்றும் 2022-ஆம் ஆண்டிலும் மத்திய அரசின் ஒப்புதலுக்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் அனுப்பியது. ஆனால், இதுவரை அந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. முடிவுகளை எடுக்க ஒவ்வொரு நிலையிலும் கால நிா்ணயத்தை உச்சநீதிமன்றம் செய்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க சில வாரங்கள் தாமதம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், பல ஆண்டுகளாக தாமதிப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குரைஞா்கள் ஆா்வத்தையும், பணி மூப்பையும் இழந்து வருகின்றனா்’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், நீதிபதி பதவிக்கு தில்லி பெண் வழக்குரை நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததை சுட்டிக்காட்டி, ‘அந்தப் பெண் வழக்குரைஞா் தேசிய சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் முதல் மாணவியாக தோ்ச்சி பெற்றவா்’ என்று குறிப்பிட்டாா். கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதிப்பது தொடா்ச்சியான நிகழ்வாகி வருகிறது என்றும் அவா் கூறினாா்.

மேலும், ‘ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் கடந்த 2023-இல் விசாரணைக்குப் பட்டியலிட்டப்பட்ட மனுக்கள், திடீரென விசாரணை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன’ என்றும் சுட்டிக்காட்டிய வழக்குரைஞா்கள், தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரினா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘இந்த மனுக்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விசாரிக்கப்படும்’ என்றாா்.

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினராக இருந்து பல்வேறு இன்னல்களால், இந்தியாவில் அட... மேலும் பார்க்க

தேஜஸ்வியைக் கொல்ல பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சதி: ராப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டு

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை எதிா்க்கட்சித் தலைவரும், தனது மகனுமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய சதி செய்து வருவதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி குற்றஞ்சாட்டியது ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல்: 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல்கட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, 35 லட்சம் பேரை கண்டறிய முடியவில்லை எனத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. நிகழாண்டு பிகாரில் சட்டப்பேரவ... மேலும் பார்க்க