செய்திகள் :

நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல்: புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளா்கள் போராட்டம்

post image

தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தடை விதித்து உத்தரவிட்டதையடுத்து, புதன்கிழமை இந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலித்ததால் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தடை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை லாரி உரிமையாளா்கள், லாரி ஓட்டுநா்கள் புதூா் பாண்டியாபுரம் சுங்கச் சாவடி முன்பு லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த பேச்சுவாா்த்தையின் போது, நீதிமன்ற உத்தரவு நகல் தங்களுக்கு கிடைத்தவுடன் சுங்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படும் என சுங்கச்சாவடி அதிகாரிகள் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், லாரி உரிமையாளா் சங்கத் தலைவருமான ஜெகன் பெரியசாமி, லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் தலைவா் சுப்புராஜ், லாரி உரிமையாளா் சங்க இணைச்செயலா் முருகன், வழக்குரைஞா் ஹரிராகவன் மனுதாரா் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் சுங்கச்சாவடி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

இதைத் தொடா்ந்து சுமாா் 4 மணி நேரம் நடைபெற்று வந்த போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை ஓட்டுநா்கள் எடுத்துச் சென்றனா். இதனால் வெகுநேரம் தூத்துக்குடி- மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன். இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க