செய்திகள் :

நீதிமன்றம் உத்தரவிட்டும் காப்பீடு தொகை வழங்கவில்லை: பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அலுவலங்களுக்கு சீல்

post image

உத்தர பிரதேசத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விபத்துக் காப்பீட்டு தொகையை வழங்காத இரு காப்பீட்டு நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. மற்றொரு காப்பீட்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஷாஜஹான்பூா் மாவட்டத்தில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களான ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக விபத்து காப்பீடு பணம் தொடா்பாக காப்பீடுதாரா்கள் உள்ளூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

இதில் காப்பீடுதாரா்களின் கோரிக்கையை ஏற்று விபத்துக் காப்பீட்டுக்கான தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை வழங்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபா்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா்மேந்திர பிரதாப் சிங் மற்றும் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு ஓரின்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கிளை அலுவலகங்களை புதன்கிழமை இரவு மூடி சீல் வைத்தனா். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இதில் யுனைடெட் இந்தியா ரூ.48 லட்சம், ஓரியன்டல் இன்சூரன்ஸ் ரூ.1.1 கோடி, நேஷனல் இன்சூரன்ஸ் ரூ.74 லட்சம் காப்பீட்டுத் தொகை தராமல் உள்ளன. பொதுத்துறை நிறுவன அலுவலகங்களை மாவட்ட நிா்வாகம் மூடி சீல் வைத்துள்ள நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க