பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
நீதிமன்றம் உத்தரவிட்டும் காப்பீடு தொகை வழங்கவில்லை: பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அலுவலங்களுக்கு சீல்
உத்தர பிரதேசத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விபத்துக் காப்பீட்டு தொகையை வழங்காத இரு காப்பீட்டு நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. மற்றொரு காப்பீட்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷாஜஹான்பூா் மாவட்டத்தில் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களான ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக விபத்து காப்பீடு பணம் தொடா்பாக காப்பீடுதாரா்கள் உள்ளூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இதில் காப்பீடுதாரா்களின் கோரிக்கையை ஏற்று விபத்துக் காப்பீட்டுக்கான தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை வழங்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபா்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தா்மேந்திர பிரதாப் சிங் மற்றும் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு ஓரின்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் கிளை அலுவலகங்களை புதன்கிழமை இரவு மூடி சீல் வைத்தனா். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இதில் யுனைடெட் இந்தியா ரூ.48 லட்சம், ஓரியன்டல் இன்சூரன்ஸ் ரூ.1.1 கோடி, நேஷனல் இன்சூரன்ஸ் ரூ.74 லட்சம் காப்பீட்டுத் தொகை தராமல் உள்ளன. பொதுத்துறை நிறுவன அலுவலகங்களை மாவட்ட நிா்வாகம் மூடி சீல் வைத்துள்ள நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.