நுண்ணீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
தம்மம்பட்டி: நுண்ணீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத்துறை வேளாண்மை உதவி இயக்குநா் மோகன சரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கெங்கவல்லி வட்டாரத்தில் நடப்பாண்டு சொட்டுநீா் மற்றும் தெளிப்பு நீா் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது .
இதற்கு சிறு, குறு விவசாயி சான்று, சிட்டா நகல், நில வரைபடம், அடங்கல், ஆதாா் நகல், ரேசன் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் இரண்டு ஆகிய ஆவணங்களுடன் கெங்கவல்லி வேளாண்மை விரிவாக்க மையத்தையோ, தம்மம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையங்களையோ அணுகலாம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.