நூருல் இஸ்லாம் பல்கலை.யில் கருத்தரங்கு
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், இலக்கிய இன்பம் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது.
பல்கலைக்கழக பதிவாளா் திருமால்வளவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன நிா்வாக சபை உறுப்பினரும் பேராசிரியருமான வி. வேணுகுமாா் கலந்து கொண்டு உரையாற்றினாா். பல்கலைக்கழக இலக்கியக் கழக ஒருங்கிணைப்பாளா் ஜி. ராமதாஸ் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.
தமிழ்த் துறை பேராசிரியா் தனேஷ் வரவேற்றாா். மலையாளத் துறை தலைவா் சி.எல். ப்ரமீலா நன்றி கூறினாா்.