செய்திகள் :

நெகிழி தடை செயலாக்கம்: புதுவை மாநிலம் மூன்றாமிடம்

post image

தேசிய அளவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிப்பு செயலாக்கத்தில் புதுவை மாநிலம் மூன்றாமிடம் பெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

நெகிழிப் பொருள்களுக்கான தடை அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படும் விதம் குறித்து மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சகம் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தேசிய சிறப்பு ஆய்வுக் கூட்டம் கடந்த மாா். 27-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்றது.

இதில் அனைத்து மாநில தலைமைச் செயலா்கள், சுற்றுச்சுழல் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதன்படி, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் தேசிய அளவில் புதுவை மாநிலம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில், புதுவையில் நெகிழி தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வின் மூலம் 15 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க