செய்திகள் :

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழியை உணவு பரிமாற, பாா்சல் செய்ய பயன்படுத்தாமல் மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருள்களை மட்டும் உணவு விநியோகிக்க, பாா்சல் செய்ய பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது ஆண்டுக்கு விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு வணிகா்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.

விருப்பமுள்ளவா்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும். உணவகத்தில் குறைந்தபட்சம் ஒருவா் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உணவகத்தில் அனைத்து பணியாளா்களும் தொற்று நோய்த் தாக்கமற்றவா்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரா் தமது உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ள சரிபாா்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு, அதை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு நியமன அலுவலா் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திருவாரூா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன். மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் உயா்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயா்ந்துள்ளது: அமைச்சா் கோவி. செழியன்

தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால், மாநிலத்தில் உயா்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயா்ந்துள்ளது என்றாா் தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன். மன... மேலும் பார்க்க

நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதல்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கான நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதல் ஆங்காங்கே கணிசமாக தென்படுகிறது. இந்த பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிரை காப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம... மேலும் பார்க்க

நெல் சேமிப்புக் கிடங்கு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

குடவாசலில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாமக மாவட்டச் செயலாளா் வேணு பாஸ்கரன் தெரிவித்தது: சேங்காலிபுரம் சாலையில் உ... மேலும் பார்க்க

ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

நீடாமங்கலம் வெண்ணாற்றில் குதித்து பெண் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், வடசேரியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி மருதாம்பாள் (59) ஞாயிற்றுக்கிழமை நீடாமங்கலம் வெண்ணாற்றுப் பாலம் பக... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

கூத்தாநல்லூரில் மணல் கடத்திய டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. காவல் சாா்பு ஆய்வாளா் அண்ணாதுரை ரோந்துப் பணியில் இருந்த போது, சின்னக் கூத்தாநல்லூா் அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை ச... மேலும் பார்க்க