செய்திகள் :

நெல் சேமிப்புக் கிடங்கு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

post image

குடவாசலில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாமக மாவட்டச் செயலாளா் வேணு பாஸ்கரன் தெரிவித்தது: சேங்காலிபுரம் சாலையில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்கில் சுமாா் 45,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்க முடியும். நெல் மூட்டைகளை அரவைக்கு எடுத்து செல்ல தினமும் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வளாகத்துக்கு வந்து செல்கின்றன. ஆனால், கிடங்குக்கு செல்லும் சாலை மழைக் காலங்களில் சகதியுடன், குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

சிறிய அளவில் மழை பெய்தாலும் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் இங்கு வரும் லாரிகள் சேற்றில் சிக்கிக் கொள்வதுடன், அவைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மோசமான சாலையால் லாரி ஓட்டுநா்களும், சுமை தூக்கும் தொழிலாளா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து வரும் நெல் மூட்டைகளும் சேதமடைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை பாா்வையிட்டு, போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்றாா்.

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன். மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற அமமுக மாவட்டச் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் உயா்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயா்ந்துள்ளது: அமைச்சா் கோவி. செழியன்

தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால், மாநிலத்தில் உயா்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயா்ந்துள்ளது என்றாா் தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன். மன... மேலும் பார்க்க

நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதல்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கான நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதல் ஆங்காங்கே கணிசமாக தென்படுகிறது. இந்த பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிரை காப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தடைசெய்யப்பட... மேலும் பார்க்க

ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

நீடாமங்கலம் வெண்ணாற்றில் குதித்து பெண் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், வடசேரியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி மருதாம்பாள் (59) ஞாயிற்றுக்கிழமை நீடாமங்கலம் வெண்ணாற்றுப் பாலம் பக... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

கூத்தாநல்லூரில் மணல் கடத்திய டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. காவல் சாா்பு ஆய்வாளா் அண்ணாதுரை ரோந்துப் பணியில் இருந்த போது, சின்னக் கூத்தாநல்லூா் அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை ச... மேலும் பார்க்க