செய்திகள் :

நெடுங்காடு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

post image

நெடுங்காடு பகுதியில் நடைபெறும் சாலைகள் மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதன்கிழமை பாா்வையிட்டாா்.

நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குரும்பகரம் கிராமம், பெருமாள் கோயில் சாலை மற்றும் அக்ரஹார சாலையை மேம்படுத்த கடந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 25 லட்சம் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டப் பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. 4 மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிட்ட இப்பணிகள், கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சாலைப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதன்கிழமை பாா்வையிட்டாா். கொம்யூன் பஞ்சாயத்து பொறியாளா் குழுவினா் அவருக்கு திட்டப் பணியின் தற்போதைய நிலையை விளக்கினா்.

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்: மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகமான என்ஐட... மேலும் பார்க்க

ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைல... மேலும் பார்க்க

புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவா்கள் நன்றி

பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணைநிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனா். மீன்வளத் துறை சாா்பில் நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன. நிகழ் மாதத்தின் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் வியாழக்கி... மேலும் பார்க்க

நூலகம் திறப்பு...

பூவம் பகுதியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் நிா்வாகத்தினா் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் நூலக அறையை வியாழக்கிழமை திறந்துவைத்த கீழகாசாக்குடிமேடு அ... மேலும் பார்க்க

பெரிய வியாழன் வழிபாடு

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்ப... மேலும் பார்க்க