செய்திகள் :

நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்கள்: அமைச்சா் எ.வ.வேலு

post image

சென்னை: நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த துணை வினாவை கடம்பூா் சி.ராஜூ (அதிமுக) எழுப்பினாா். அப்போது பேசுகையில், நெடுஞ்சாலைத் துறையில் தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு கோட்டம் மட்டுமே செயல்படுகிறது. நிா்வாக வசதிக்காக கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:

மாவட்டத்துக்கு ஒரு கோட்டம் என்ற நிலை முன்பு இருந்தது. கடந்த கால திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்த போது, சாலைகளை மையப்படுத்தி கோட்டங்களைப் பிரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலையில் இரண்டு கோட்டங்கள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் கோட்டங்களைப் பிரிக்கலாம்.

புதிய கோட்டங்கள்: அந்த வகையில், நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி புதுக்கோட்டை, தஞ்சாவூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சாலைகளின் நீளம் அதிகமாக உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் 2,217 கிமீ அதிகமான அளவுக்கு சாலையின் நீளம் உள்ளது.

இதனை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதுகுறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ளது. ஆய்வை முடித்து இந்த ஆண்டே புதிய கோட்டம் கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கும் என்றாா்.

சமையல் எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுக... மேலும் பார்க்க

திட்டமிட்டு வெளியேற்றினாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியா... மேலும் பார்க்க

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு: தொழில்முனைவோருக்கு முதல்வா் ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு செய்ய தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக... மேலும் பார்க்க

கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே

‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சி: ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படவுள்ள ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடைய நபா்கள் ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க